Saturday 10 June 2017

சென்னையின் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கான மிக சிறந்த மருத்துவமனை

இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாத கோடானு கோடி பேருக்கு இன்று பெரும் வரப் பிரசாதமாக அமைந்துள்ளது செயற்கை கருத்தரித்தல் முறை (ivf treatment). இந்த தொழில் நுட்ப முறையில் பெண்ணின் கரு முட்டையுடன் ஆணின் விந்துவை சோதனை ஆய்வகத்தில் வைத்து கருத்தரித்தரிக்க செய்து அந்த முட்டையை பெண்ணின் கருப்பைக்குள் வைத்து வளர செய்வதே செயற்கை கருத்தரித்தல் ஆகும். எங்கள் பில்லரோத் மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் முறையை புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு மிக சிறந்த முறையில் செய்யப்படுகிறது. மேலும் எங்களிடம் சிகிச்சை பெற்று குழந்தை பேறு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

http://ivf-chennai.billrothhospitals.com/what-is-ivf.html

செயற்கை கருத்தரித்தல் முறை (ivf treatment) எப்போது பயன்படுத்தப்படுகிறது?


பின்வரும் காரணங்களின் போது செயற்கை கருத்தரித்தல் முறை (ivf treatment) செய்யப்படுகிறது .
  • அண்டவிடுப்பின் கோளாறுகள் கொண்ட பெண்கள் (Women with ovulation disorders), முன்கூட்டிய கருப்பை தோல்வி (premature ovarian failure), கருப்பை நார்த்திசுக்கட்டிகள் (uterine fibroids)
  •  கருமுட்டை குழாயாயை முன்னரே நீக்கி இருத்தல் (fallopian tubes removed)
  • மரபணு கோளாறு (genetic disorder)
  • சொல்லப்படாத கருவுறாமை (Unexplained infertility)
  • சேதமடைந்த கருப்பை குழாய்கள் (Blocked or damaged fallopian tubes)
  • ஆணின் விந்து எண்ணிக்கை குறைவாக இருத்தல்.

செயற்கை கருத்தரித்தல் முறையின் (ivf treatment) செயல்முறைகள்:


படி 1 : முட்டை உற்பத்தி தூண்டுவதற்கு முதலில் கருவுற்றல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றது. இரத்த சோதனை மாதிரிகள் செய்து ஹார்மோன் அளவை சரிபார்க்கபடுகிறது. பின், டிரான்ஸ்வாஜினல் அல்ட்ராசவுண்ட் மூலம் கருப்பைகள் பரிசோதிக்கப்படுகிறது.

படி 2 : ஒரு அல்ட்ராசவுண்ட் இமேஜிங் வழிகாட்டுதல் மற்றும் இடுப்பு குழி மூலம் செருகப்பட்ட ஒரு வெற்று ஊசி பயன்படுத்தி முட்டை எடுக்கப்படுகின்றது.
மேலும், வலி வராமல் இருக்க மருந்து வழங்கப்படுகிறது.

படி 3 : ஆணின் விந்துவை எடுத்து அதனை முன்னரே எடுத்து வைத்துள்ள பெண்ணின் முட்டையுடன் இணைக்கப்படுகிறது.

படி 4 : இவ்வாறு, ஆய்வகத்தில் ஆண் மற்றும் பெண்ணின் முட்டைகளை ஒன்றினைத்து முட்டையை கருவடைய செய்யப்படுகிறது.

படி 5 : இம்முறையில் முட்டை கருவடைய ஐந்து நாட்கள் எடுக்கும். பின் கருமுட்டையை பெண்ணின் கருப்பைக்குள் ஒரு குழாய் வழியே செலுத்தப்படுகிறது. இது முழுமையாக கருவடைய 6 முதல் 10 நாட்கள் ஆகிறது.

எங்கள் பில்ரோத் மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் முறையை புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு, அனுபவமிக்க மருத்துவர்களால் சிகிச்சை மிக சிறந்த முறையில் செய்யப்படுகிறது. மேலும் எங்களிடம் சிகிச்சை பெற்று குழந்தை பேறு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

http://ivf-chennai.billrothhospitals.com/contact-us.html


Mail Us : billrothivf@gmail.com

சென்னையின் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கான மிக சிறந்த மருத்துவமனை

இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாத கோடானு கோடி பேருக்கு இன்று பெரும் வரப் பிரசாதமாக அமைந்துள்ளது செயற்கை கருத்தரித்தல் முறை (...